மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

திருக்கோவில் அமைவிடம்

குருக்கோடு நவநிதியும் நவரசமும் கொழிக்கும் கோடு
தருக்கோடு சுரபியுந் சிந்தாமணியும் தழைத்த தெய்வத் தானமாமால்
இருக்கோடு பலகலைகள் ஆகமங்கள் குரவோர்கள் நிறைந்த கோடு
செருக்கோடு உமையரனைப் பிரியாலினி திருக்கும் திருச்செங்கோடே