மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

பதினெண் சித்தர்கள் சமாதி அடைந்த தலங்கள்...

1. கொங்கணவர் - திருப்பதி

2. போகர் - பழநி

3. திருமூலர் - சிதம்பரம்

4. பாம்பாடம்சித்தர் - விருத்தாச்சலம்

5. இடைக்காட்டுச்சித்தர் - திருவண்ணாமலை

6. சச்சிதானந்த சுவாமி - வள்ளிமலை

7. கோரக்கர் - போரூர்

8. நந்தீசர் - காசி

9. குதம்பை சித்தர் - மாயவரம்

10. கமலமுனிவர் - திருவாரூர்

11. வான்மீகர் - எட்டக்குடி

12. கட்டமுனிவர் - ஸ்ரீரங்கம்

13. மச்சமுனிவர் - அழகர்கோவில்

14. ராமதேவர் - மதுரை

15. கந்தாநத்தித்தேவர் - வைத்தீஸ்வரன் கோயில்

16. தன்வந்திரி - ராமேஸ்வரம்

17. பதஞ்சலி முனிவர் - திருவனந்தபுரம்

18. கும்பமுனிவர் - சப்தகிரி