மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்


சிரிக்கலாம் வாங்க ...





தந்தை : நான் உன்னை அடிச்சுட்டா உன் கோபத்தை நீ எப்படி கண்ட்ரோல் பண்ணுவே?

மகன் : டூத் ப்ரஷினால டாய்லெட் சுத்தம் செய்வேன்.

தந்தை : அதனால எப்படி கோபம் கட்டுப்படும்!!!

மகன் : அந்த ப்ரஷ் உங்க ப்ரஷ் ஆச்சே. ஹி..ஹி.

***

நண்பனின் செல்பேசியில் சுட்ட நவீன கட்டபொம்மன்

வானம் பொழிகிறது; பூமி விளைகிறது;
உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ்.
என்னோடு கடைக்கு வந்தாயா?
செல் வாங்கித் தந்தாயா?
ஓசி சிம்கார்டு கொடுத்தாயா?
பில் பணமாவது கட்டினாயா?
அல்லது உன்னோடு கொஞ்சி விளையாடும்
உன் அழகான கேர்ள் பிரண்ட்சுக்கு
என் நம்பரையாவது கொடுத்தாயா!!
மானங்கெட்டவனே!
யாரிடம் கேட்கிறாய் எஸ்.எம்.எஸ்.
எடு உன் செல்லை;
போடு அதைக் கீழே;
எடு ஒரு கல்லை;
கல்லைப் போட்டு நொறுக்கு உன் செல்லை.

***

"ஏங்க.. நாளைக்குத்தான் நம்ம கல்யாண நாள். எப்படிக் கொண்டாடலாம்?"


"ரெண்டு நிமிஷம் மவுன அஞ்சலி செலுத்துவோம்!"


******


"பேங்க்லே கட‎ன் வாங்கி பைக் வாங்கினேன் இல்லையா? கடனைக் கட்ட முடியாததால பைக்கைத் தூக்கிட்டுப் போயிட்டாங்க"


"ஓ!! இப்படினு தெரிஞ்சிருந்தா பேங்க்லே கடன் வாங்கி கல்யாணம் பண்ணிருந்திருப்பேனே!!"


******


அடர்ந்த காட்டில்..
"ஏண்டா.. ஷூ மாட்டிக்கிறே?"
"புலி நம்மைப் பார்த்து துரத்துச்சி‎னா! அதுக்குத்தா‎ன்"
"புலியை விட வேகமா ஓடிடுவியோ?"
"புலியை விட வேகமா ஓடணும்னு அவசியம் இல்ல. உன்னை விட வேகமா ஓடினாலே போதும்!"


******
"எதுக்கு மேலே பார்த்துக்கிட்டு ‏ இருக்கீங்க?"
"மதுரை பஸ் பத்து மணிக்கு மேலே வரும்‎னு சொன்னாங்க.. அதான்!"



******
நரகத்தில்...
"நா‎ன் என் கேர்ள் ஃபிரெண்டுக்கு கால் பண்ண‎ணும். இங்கே எவ்வளவு காசு ஆகும்?"
"காசெல்லாம் கிடையாது. நரகம் டூ நரகம் அ‎ன்லிமிட்டெட் ஃப்ரீதா‎ன்!"


******


"உங்க காலேஜுல சுமாரா எத்தனை பேரு இருப்பாங்க?"
"எ‎ங்க காலேஜுல எல்லாருமே பார்க்க சுமாராதான் இருப்பாங்க"


******
திருட‎ன் இரவில் வீட்டினுள் நு‏ழைந்து பணத்தைத் திருடிக்கொண்டு போகும்போது, சிறுவ‎ன் விழித்துக் கொள்ள...


"ஏய்.. சத்தம் போடாதே.. குத்திடுவே‎ன்"
"நா‎ன் சத்தம் போடறதெல்லாம் இ‏ருக்கட்டும். போகும்போது மரியாதையா என் ஸ்கூல் பேக்கையும் சேர்த்துத் தூக்கிட்டுப் போ'



                                                                            ************


கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?

மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்!
                                                             ************
கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!

கடவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக் கேட்க கூடாது...
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...?
                                                 
                                                              ************

மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?
                                                              ************

  
முதலில் பொன்மொழிகளை பார்ப்போம்.

1) முதல் பட்டன் தப்பா போட்டா அடுத்து வர்ற எல்லா பட்டனுமே தப்பாதான் போகும்.

2) காதலிக்கிறவன் இன்னைக்கு பார்க்குக்கு போவான். நாளைக்கே அவன் பாருக்கு போவான்.

3) பொண்டாட்டிங்க எல்லாம் காங்கிரஸ் மாதிரி. கூடவே இருந்தாலும் தலைவலி தருவாங்க. காதலிகள் எல்லாம் வைகோ மாதிரி. சொல்ற பேச்சு கேட்டு அழகா நடந்துப்பாங்க.

4) வட்டிக்கு கொடுத்த பணம் குட்டி போடும். ஆனா குட்டிக்கு கொடுத்த பணம் கையை விட்டு போகும்.

5) ஹாஃப் அடிச்சா சவுண்டு விடுவான். ஃபுல் அடிச்சா கிரவுண்ட்ல விழுவான். அவன் தாண்டா குடிகாரன்

6) ஃபர்ஸ்ட் பஸ் ஃபர்ஸ்ட் வரும். கடைசி பஸ் கடைசியா வரும்.

7) 4 தடவ ஷேவ் செஞ்ச ஜில்லெட்டும், மண்ணெண்ணயில ஓட்டுற புல்லட்டும் பிரச்சினை கொடுக்கத்தான் செய்யும்.

 எதை நீ எடுத்தாயோ அது ஃப்ரென்ச்சு படத்திலிருந்து சுட்டது
எதை நீ கொடுத்தாயோ அது கொரிய படத்திலிருந்து சுட்டது
எந்த ஃபிகர் இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொவருடையதாகிறது
மற்றொரு நாள் அது வேறொருவருடைதாகும்.
இந்த மாற்றம் சினிமா நியதியாகும்

இதை சொன்ன அறிஞர்களின் பெயர்கள்

1) டெய்லர் தங்கவேலு

2) தாடிக்காரன் தாமு

3) குடும்பஸ்தன் குமாரு

4) ஃபைனான்ஸ் ஃபிராங்க்ளின்

5) குவார்ட்டர் கோவிந்தன்.

6) டிரைவர் டக்ளஸ்

7) மெக்கானிக் மைக்கேல்

 சினிமா சின்னசாமி