தண்ணீர் குடிக்காத மிருகம்

- அமெரிக்க ஜனாதிபதிகளில் புலிட்சர் விருதினை பெற்ற ஒரே ஒருவர் ஜான் எப்.கென்னடிதான்.
- லினஸ் பாலிங் வேதியியலுக்கான நோபல் பரிசை 1954 ஆம் ஆண்டிலும், சமாதானத்திற்கான நோபல் பரிசை 1962 ஆம் ஆண்டிலும் பெற்றார். இரண்டு வெவ்வேறான பிரிவுகளில் நோபல் பரிசினை பெற்றஒருவர் இவர்தான்.
- உலகில் மிக நீளமான பாலம் சைனாவில் உள்ளது. இது 43.4 கி.மீ நீளம் கொண்டது.
- நைல் நதி 7088 கி.மீ தொலைவு கொண்ட மிக நீளமான நதி என்பதுடன் உலகிலேயே மிக நீளமான நதி என்கிற பெருமைக்குரியதாகும்.
- சந்திரனில் இதுவரை 12 நபர்கள் கால் பதித்துள்ளனர்.
- அமெரிக்க ஜனாதிபதிகளில் 15 வது ஜனாதிபதியாக இருந்த ஜேம்ஸ் பக்னான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தவர்.
- அவுஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையைச் சேர்ந்த கோவாலாக் கரடி தண்ணீர் குடிப்பதில்லை. தமக்குத் தேவையான நீரை தாம் வசிக்கும் யூக்கலிப்டஸ் மரங்களின் இலைகளிலிருந்தே பெறுகின்றன.
- “காட்விட்’ என்ற பறவை, உண்ணாமல், உறங்காமல், ஓய்வெடுக்காமல் தொடர்ந்து 11 ஆயிரம் கி.மீ.தூரம் வரை பறக்கக் கூடியவை.
- சுத்தமான தண்ணீர் மின்சாரத்தைக் கடத்தாது. அதில் வேறு தாதுக்கள் கலந்திருந்தால் மட்டுமேமின்சாரம் கடத்தப்படும்.
- சாகும் வரை வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரே உயிரினம் முதலைதான்.
- பிரான்ஸ், மேற்கு ஜெர்மனியில் குழந்தைகளுக்கு நம் விருப்பம்போல் பெயர் வைக்க முடியாது. அரசாங்கம் வெளியிடும் பெயர் பட்டியலில் இருந்துதான் ஒரு பெயரை தேர்ந்தேடுக்க வேண்டும்.
- நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த கரடி இரவில் சுறுசுறுப்பாக செயல்படும். மரங்களில் தலைகீழாக ஏறும். குளிர் காலத்தை தூங்கியே கழிக்கும். இதற்கு மோப்பசக்தி அதிகம். .
- ஐ.நா வின் முதல் பொதுச் செயலாளர் நோர்வே நாட்டைச் சார்ந்த டிரைக்வேல்.
- உலகமொழிகளில் வடமிருந்து இடமாக எழுதப்படும் மொழி உருது.
- காரைக் கண்டுபிடித்தவரின் பெயர் குகாட்.
- யோகா என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு ஒழுக்கம் என்று பொருள்.