மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

அபிஷேகங்களால் வரும் பலன்கள்...




நாம் இறைவனுக்கு செய்யும் அபிஷேகப் அபிஷேகப் பொருள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பலன் கிடைக்கும் என்று இந்து மத புராணங்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான சில மட்டும் இங்கே...
  • சந்தனாதித் தைலம் - சுகம்தரும்.
  • திருமஞ்சனப்பொடி- கடன், நோய், தீரும்.
  • பஞ்சாமிர்தம் - உடல் வலிமை தரும்.
  • பால் - நீண்ட ஆயுள் கிட்டும்.
  • தயிர் - நன்மக்கட்பேறு கிடைக்கம்.
  • நெய் - வீடு பேறு அடையலாம்.
  • தேன் - சுகம்தரும், குரல் இனிமை தரும்.
  • கரும்பின் சாறு - நல்ல உடலைப் பெறலாம்.
  • இளநீர் - போகம் அளிக்கும்.
  • எலுமிச்சம் பழம் - பகைமையை அழிக்கும்.
  • விபூதி - போகமும், மோட்சமும் நல்கும்.
  • சந்தனக் குழம்பு, பன்னீர் - திருமகள் வருவாள்.
  • வலம்புரிச் சங்கு - தீவினை நீக்கும், நல்வினை ஆக்கும்.
  • நெல், எண்ணை - விஷசுரம் நிவர்த்தி.
  • நீர் - சாந்தி உண்டாகும்.
  • வாழைப்பழம் - பயிர் விருத்தி ஆகும்.
  • வெல்லம் - துக்க நிவர்த்தி.
  • சர்க்கரை - சத்ரு நாசம்.
  • அன்னம் - சகல பாக்கியங்களும் உண்டாகும்.
  • மாம்பழம் - வெற்றி கிடைக்கும்.
  • சொர்ணாபிஷேகம் - இலாபம் தரும்.
  • கலாபிசேகம் -நினைத்தவை நடக்கும்.
  • பால் பஞ்சாமிர்தம் - சம்பத்து நல்கும்.