மாதமிருமுறை 01 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது...

இன்றைய சொற்பொழிவு...

"நமக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. மற்றவருக்கு என்ன தெரியும்?" என்று நினைத்துக் கொண்டு தருக்குற்று இருக்கக் கூடாது. கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு. எல்லாம் தெரிந்தவர்களும் உலகில் இல்லை. எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை. ஆதலால் அடக்கமாகவும் பணிவாகவும் இருக்க வேண்டும். பணிவு மனிதனின் வாழ்வை உயர்த்தும். - திருமுருகக் கிருபானந்த வாரியார்

சீரண லேகியம் 




தேவையான பொருட்கள்:
  • சுக்கு - 25 கிராம்
  • சித்தரத்தை - 10 கிராம்
  • கண்டந்திப்பிலி - 10 கிராம்
  • அரிசித்திப்பிலி - 10 கிராம்
  • ஏலக்காய் - 10 கிராம்
  • இலவங்கப்பட்டை - 10 கிராம்
  • சோம்பு - 40 கிராம்
  • வெல்லம் - 250 கிராம்
  • கிராம்பு - 5 கிராம்
  • மிளகு - 50 கிராம்
  • இஞ்சி - 25 கிராம்
  • சீரகம் - 20 கிராம்
  • சாத்துக்குடி - 1 எண்ணம்
  • நெய் - 1 தேக்கரண்டி
  • நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
  • தேன் - 1தேக்கரண்டி

செய்முறை:

1. இஞ்சி, சாத்துக்குடி, நெய், நல்லெண்ணெய், தேன் தவிர மற்ற எல்லாப் பொருட்களையும் வெய்யிலில் காய வைத்துக் கொள்ளவும்.

2. வாணலியைச் சூடாக்கி தனித்தனியாக எல்லாப் பொருட்களையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

3. சூடாக்கி வறுத்த அனைத்தையும் இடித்துப் பொடியாக்கவும். தேவையான அளவு தூளாக்கிக் கொள்ளவும்.

4. இஞ்சியை சிறிது தண்ணீர் விட்டு அரைத்துச் சாறு எடுக்கவும்.

5. சாத்துக்குடியைப் பிழிந்து வடிகட்டிக் கொள்ளவும்.

6. வெல்லத்தை அடுப்பில் வைத்துத் தண்ணீர் விடாமல் கரைத்து வடிகட்டி எடுக்கவும்.

7. வெல்லச்சாறில் தேன், இஞ்சிச்சாறு, சாத்துக்குடிச் சாறு போன்றவைகளைக் கலந்து கொள்ளவும். 

8. இந்தச்சாற்றில் அரைத்து வைத்த பொடிவகைகளை சிறிது சிறிதாகத் தூவிக் கொண்டே கிளறவும்.

9. கலவை தளர்வாக இருக்கும் போது அடுப்பில் இலேசான சூட்டில் நெய்யும் எண்ணெய்யும் விட்டுக் கிளறவும்.

10. தொட்டால் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும் பதத்திற்கு வந்தால் இறக்கி நன்றாகக் கிளறி வைக்கவும்.


இந்த சீரண லேகியத்தை ஆறிய பின்பு பாட்டிலில் அடைத்து வைத்து தினசரி இரவு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் சாப்பிடும் உணவு விரைவில் செரிமாணம் ஆவதுடன் மலச்சிக்கல் வருவதும் குறையும்.