வாத்துக்கு ஒரு கண் தெரியாது.

- உலகத்தின் மிகவும் பெருமை வாய்ந்த கட்டிடமாக அனைவராலும் அதிசயத்து பார்க்கும் வெள்ளை மாளிகையில் முதன் முதலில் குடியேறிய அமெரிக்க அதிபர் ஜான் ஆடம்ஸ்.
- வாத்துக்கு இரு கண்கள் இருந்த போதிலும் ஒரு கண்ணில் மட்டுமே பார்வை இருக்கிறதாம் . அதன் மற்றொரு கண்ணினால் பார்க்க இயலாது.
- கம்பயூட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.
- ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.
- நெப்போலியன், ஜூலியஸ் சீஸர், ஹானிபால், பதினான் காம் லூயி போன்ற மாவீரர்கள் பிறக்கும் போதே பற்களுடன் பிறந்தவர்கள்.
- ஜப்பானியக் கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே இவை விமானத்தைப் போல முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும்.
- இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள tapetum lucidum என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்ககின்றன.
- மனிதனின் இதயத் துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும், ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும், வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன.
- ஒலியைவிட வேகமாச் செல்லும் விமானத்தின் பெயர் சோனிக் விமானம். இது 1969-ல் முதன்முதலாகப் பறந்த போது மணிக்கு 2,333 கி.மீ. வேகத்தில் பறந்தது.
- உலகின் மிக வேகமாக ஓடும் நாயினம் Grey hound தான். இவற்றின் வேகம் மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர்கள். இந்த நாய்களின் தோற்றம் சுமார் 6000 வருடங்களுக்கு முன்பு பண்டைய எகிப்தில் உருவானதாக கருதப்படுகின்றது.
- உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டரங்கம் பராகுவே நாட்டில் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 2,40,000 பேர் அமர்ந்து போட்டிகளை கண்டு ரசிக்கலாமாம்.
- சூனியம் அல்லது சுழி (zero) என்ற எண் இந்தியர்களால் 3 ஆம் நூறாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
- ஆசியா, ஐரோப்பா ஆகிய 2 கண்டங்களை இணைத்து வரும் ஒரே நகரம் இஸ்டான்புல் (துருக்கி) தான்.
- இந்தியாவை மூன்று பக்கமும் சூழ்ந்துள்ள கடற்கரை ஓரத்தின் மொத்த நீளம் 7516 கிலோமீட்டர்கள் .